search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
    X

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது52). இவர் அந்த பகுதியில் ரேடியோ பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி கடைக்கு தேவையான பொருட்களை வாங்க வேதாரண்யம் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்.

    அவர் வேதாரண்யம்-திருத்துறைப் பூண்டி மெயின் ரோட்டில் ஆதனூர் பாலம் அருகே திரும்பும்போது பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த சோழன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராஜேந்திரன், சோழன் படுகாயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×