என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கணவர் தப்பி ஓட்டம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சிசு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மினு (வயது 18). இவர்களது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும்.
கடந்த 1-ந்தேதி முதல் சிசுவின் வீடு வெளிப்பக்கம் பூட்டி கிடந்தது. கணவன்- மனைவி இருவரும் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு உடல் அழுகிய நிலையில் மினு அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார். கழுத்து துப்பட்டாவால் இருக்கப்பட்டு இருந்தது.
அவரது கணவர் சிசு மாயமாகி இருந்தார். எனவே அவர் குடும்பதகராறில் மனைவியை கொன்று வீட்டை பூட்டி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சிசு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மினு (வயது 18). இவர்களது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும்.
கடந்த 1-ந்தேதி முதல் சிசுவின் வீடு வெளிப்பக்கம் பூட்டி கிடந்தது. கணவன்- மனைவி இருவரும் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு உடல் அழுகிய நிலையில் மினு அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார். கழுத்து துப்பட்டாவால் இருக்கப்பட்டு இருந்தது.
அவரது கணவர் சிசு மாயமாகி இருந்தார். எனவே அவர் குடும்பதகராறில் மனைவியை கொன்று வீட்டை பூட்டி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Next Story






