என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேளம்பாக்கம் அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி வி‌ஷம் குடித்தனர்
    X

    கேளம்பாக்கம் அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி வி‌ஷம் குடித்தனர்

    கேளம்பாக்கம் அருகே காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் எம்.ஆர்.ராதா தெருவில் வசித்து வருபவர் மாதவன் (வயது 25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகாவும் (20) கடந்த 3 ஆண்டாக காதலித்து வந்தனர். இது பற்றி தெரிந்ததும் காதல் ஜோடியை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் வாழ்க்கையில் ஒன்று சேரமுடியாது என்று நினைத்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மாதவனும், கார்த்திகாவும் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×