என் மலர்
செய்திகள்

முதியவர் ராமசாமி களிமண்ணால் சிலையை வடிவமைக்கும் காட்சி
பொங்கல் பண்டிகைக்காக மண்சிலைகளை வடிவமைக்கும் 85 வயது முதியவர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக 85 வயதிலும் ஒரு முதியவர் மண்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.
புஞ்சைபுளியம்பட்டி:
தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தலைமுறையினரிடம் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வளர்ச்சி நன்மையை கொடுத்தாலும், மனிதனின் உடல் உழைப்பை குறைத்துக்கொண்டே செல்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்த எந்தவொரு வேலையையும் தற்போது கணினிமயமாக்கப்பட்ட இந்த காலத்தில் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.
எந்திரத்தை காட்டிலும் கைகளால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் ஒரு கலைநயம் இருப்பதை உணர முடியும். நாம் எத்தனை பரிமான வளர்ச்சிக்கு அடி எடுத்து வைத்தாலும் மண்பானையில் சமைத்த உணவுக்கும், களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைக்கும் தனிச்சிறப்பு இருப்பதை உணர முடியும். ஆனால் களிமண்ணால் சிலைகளை வடிவமைக்கும் தொழில் நலிவடைந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட கலை உணர்வு உடைய தொழிலை மீட்டெடுக்க அயராது பாடுபட்டு வருகிறார் 85 வயது முதியவர் ஒருவர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே அலங்காரிபாளையம் கிராமத்தை சேர்ந்த அவருடைய பெயர் ராமசாமி. இவர் தன்னுடைய வாழ்நாளில் ஆயிரக்கணக்கான களிமண் சிலைகளை வடிவமைத்து உள்ளார்.
இதுகுறித்து முதியவர் ராமசாமி கூறியதாவது:-
வானம் பார்த்த பூமியாக இருக்கும் எங்களுடைய கிராமத்தில் மண்பானைகள், அகல் விளக்குகள், சாமி சிலைகள் ஆகியவற்றை பரம்பரையாக செய்து வருகிறோம். இந்த காலக்கட்டத்திலும் மண்பாண்டம் தொடர்பான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் தொழில் செய்வதற்கு தான் ஆட்கள் கிடையாது.

எந்திரங்களின் பயன்பாடு எந்த உயரத்திற்கு சென்றாலும் குறிப்பிட்ட வேலைகளை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். நான் சிறு வயதில் இருந்தே இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆனால் தற்போது இளைஞர்கள் யாருமே இந்த தொழிலை செய்வதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. யாருமே தொழிலுக்கு முன்வராததால் நான் இந்த தொழிலை விடாமல் செய்து வருகிறேன்.
இவ்வாறு ராமசாமி கூறினார்.
ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று மாடு, பசுமாடு, வெள்ளாடு, நாய், குதிரை உள்ளிட்ட மண்ணால் ஆன புதிய சிலைகளை வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கிராம மக்கள் கருப்பராயன் கோவிலில் நேர்த்திக்கடனாக கருப்பராயன், கன்னிமார், சின்னண்ணன், பெரியண்ணன், நல்லதங்காள், மதுரை வீரன் ஆகிய சாமிகளின் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சாமி சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் சிலைகள் வெயிலில் காய வைத்து நெருப்பில் சுடப்படுகிறது. பின்னர் சிலைகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தலைமுறையினரிடம் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வளர்ச்சி நன்மையை கொடுத்தாலும், மனிதனின் உடல் உழைப்பை குறைத்துக்கொண்டே செல்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்த எந்தவொரு வேலையையும் தற்போது கணினிமயமாக்கப்பட்ட இந்த காலத்தில் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.
எந்திரத்தை காட்டிலும் கைகளால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் ஒரு கலைநயம் இருப்பதை உணர முடியும். நாம் எத்தனை பரிமான வளர்ச்சிக்கு அடி எடுத்து வைத்தாலும் மண்பானையில் சமைத்த உணவுக்கும், களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைக்கும் தனிச்சிறப்பு இருப்பதை உணர முடியும். ஆனால் களிமண்ணால் சிலைகளை வடிவமைக்கும் தொழில் நலிவடைந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட கலை உணர்வு உடைய தொழிலை மீட்டெடுக்க அயராது பாடுபட்டு வருகிறார் 85 வயது முதியவர் ஒருவர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே அலங்காரிபாளையம் கிராமத்தை சேர்ந்த அவருடைய பெயர் ராமசாமி. இவர் தன்னுடைய வாழ்நாளில் ஆயிரக்கணக்கான களிமண் சிலைகளை வடிவமைத்து உள்ளார்.
இதுகுறித்து முதியவர் ராமசாமி கூறியதாவது:-
வானம் பார்த்த பூமியாக இருக்கும் எங்களுடைய கிராமத்தில் மண்பானைகள், அகல் விளக்குகள், சாமி சிலைகள் ஆகியவற்றை பரம்பரையாக செய்து வருகிறோம். இந்த காலக்கட்டத்திலும் மண்பாண்டம் தொடர்பான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் தொழில் செய்வதற்கு தான் ஆட்கள் கிடையாது.

எந்திரங்களின் பயன்பாடு எந்த உயரத்திற்கு சென்றாலும் குறிப்பிட்ட வேலைகளை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். நான் சிறு வயதில் இருந்தே இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆனால் தற்போது இளைஞர்கள் யாருமே இந்த தொழிலை செய்வதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. யாருமே தொழிலுக்கு முன்வராததால் நான் இந்த தொழிலை விடாமல் செய்து வருகிறேன்.
இவ்வாறு ராமசாமி கூறினார்.
ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று மாடு, பசுமாடு, வெள்ளாடு, நாய், குதிரை உள்ளிட்ட மண்ணால் ஆன புதிய சிலைகளை வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கிராம மக்கள் கருப்பராயன் கோவிலில் நேர்த்திக்கடனாக கருப்பராயன், கன்னிமார், சின்னண்ணன், பெரியண்ணன், நல்லதங்காள், மதுரை வீரன் ஆகிய சாமிகளின் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சாமி சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் சிலைகள் வெயிலில் காய வைத்து நெருப்பில் சுடப்படுகிறது. பின்னர் சிலைகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
Next Story






