என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதி விபத்தில் மேஸ்திரி பலி
    X

    சென்னிமலை அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதி விபத்தில் மேஸ்திரி பலி

    சென்னிமலை அருகே தனியார் பஸ் மொபட் நேருக்கு நேர் மோதியதில் நெசவாளர் கூட்டுறவு சங்க மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தனியார் பஸ் மொபட் நேருக்கு நேர் மோதியதில் நெசவாளர் கூட்டுறவு சங்க மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

    சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது60). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தறிகளை பழுது பார்க்கும் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சீதாலட்சுமி, வயது (52) என்ற மனைவியும், மோகன்ராஜ் வயது 23 என்ற மகனும், கோகிலா வயது (21) என்ற மகளும் உள்ளனர்.

    கோகிலா பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலையில் கோகிலாவை அவரது தந்தை சாமியப்பன் தனது மொபட் மூலம் அழைத்து சென்று சிப்காட்டில் விட்டு விட்டு திரும்புவார்.

    அதுபோல் நேற்றும் காலையில் கோகிலாவை சிப்காட்டில் விட்டு விட்டு தனது மொபட் மூலம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் பாலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது பழனியில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் முன்னாடி சென்று கொண்டிருந்த லாரியை முந்திய போது எதிரில் வந்து கொண்டிருந்த சாமியப்பன் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமியப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.

    பிறகு உடனடியாக அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன்மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்து விட்டு பிறகு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் தனியார் பஸ் டிரைவர் சதீஸ்குமார் (25) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×