என் மலர்
செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி இன்று 3-வது நாளாக அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு பூமாகோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது.
இதையடுத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டிசம்பர் மாத சம்பளம் இதுவரை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உனடியாக சம்பளம் வழங்கக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று 2-வது நாளாக வேலையை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்று 3-வது நாளாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு பூமாகோவில் முன் திரண்டனர். அரசு உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியில் உள்ள மாணவ-மாணவிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீடுகளுக்கு சென்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது.
இதையடுத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டிசம்பர் மாத சம்பளம் இதுவரை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உனடியாக சம்பளம் வழங்கக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று 2-வது நாளாக வேலையை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்று 3-வது நாளாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு பூமாகோவில் முன் திரண்டனர். அரசு உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியில் உள்ள மாணவ-மாணவிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீடுகளுக்கு சென்றனர்.
Next Story






