என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசனூரில் ரோட்டை கடக்கும் யானைகள்.
    X
    ஆசனூரில் ரோட்டை கடக்கும் யானைகள்.

    ஆசனூர் ரோட்டில் பகலில் நடமாடும் யானைகள்

    ஆசனூர் ரோட்டில் பகலிலும் யானைகள் கூட்டம் நடமாடுகிறது. பலர் ரோட்டில் நடமாடும் யானைகளை ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் படம் எடுக்கிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. வனப்பகுதிக்குள் போதிய உணவும் தண்ணீரும் இல்லாததால் வன விலங்குகள் வெளியே நடமாடுவது அதிகரித்து உள்ளது.

    குறிப்பாக கர்நாடக நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் ரோட்டில் பகலிலும் யானைகள் கூட்டம் நடமாடுகிறது. இந்த யானைகள் ரோட்டோரம் நின்றபடி அங்குள்ள பசுமையான மரக்கிளைகளை உடைத்து சாப்பிடுகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது ரோட்டிலும் நிற்பதால் போக்குவரத்து தடையும் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக மாலை 5 மணிக்கு மேல் ஆசனூர் ரோட்டில் யானைகள் குட்டியுடன் நடமாடுவதை தினமும் பார்க்க முடிகிறது.

    அப்போது அந்த வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வண்டிகளை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்க்கிறார்கள். மேலும் பலர் ரோட்டில் நடமாடும் யானைகளை ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் படம் எடுக்கிறார்கள்.

    இரவு நேரத்திலும் யானைகள் மற்றும் காட்டெருமைகள் ரோட்டில் நடமாடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் மேலும் இரவு நேரத்தில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் வன விலங்குகளை படம் எடுக்கும் ஆர்வத்தில் காட்டுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்து உள்ளனர்.
    Next Story
    ×