என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி பெண் பலி
தாம்பரத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (வயது 65). இவரது வீட்டிற்கு பெரம்பூரை சேர்ந்த உறவினர் காமாட்சி வந்திருந்தார்.
நேற்று இரவு அவர்கள் 2 பேரும் மாடம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் சாலையோரம் நடந்து வந்தனர். அப்போது தாறுமாறாக வந்த லோடு ஆட்டோ திடீரென அவர்கள்மீது மோதியது.
இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த காமாட்சி உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லோடு ஆட்டோ டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் லோடு ஆட்டோவை கவிழ்த்தி நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டனர். அவர் மாடம்பாக்கத்தை சேர்ந்த அரி கிருஷ்ண பாண்டி என்பதும், மது போதையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரிந்தது.
பலத்த காயம் அடைந்த காமாட்சிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (வயது 65). இவரது வீட்டிற்கு பெரம்பூரை சேர்ந்த உறவினர் காமாட்சி வந்திருந்தார்.
நேற்று இரவு அவர்கள் 2 பேரும் மாடம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் சாலையோரம் நடந்து வந்தனர். அப்போது தாறுமாறாக வந்த லோடு ஆட்டோ திடீரென அவர்கள்மீது மோதியது.
இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த காமாட்சி உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லோடு ஆட்டோ டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் லோடு ஆட்டோவை கவிழ்த்தி நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டனர். அவர் மாடம்பாக்கத்தை சேர்ந்த அரி கிருஷ்ண பாண்டி என்பதும், மது போதையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரிந்தது.
பலத்த காயம் அடைந்த காமாட்சிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






