என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லாவரம் அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
    X

    பல்லாவரம் அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

    பல்லாவரம் அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று காலை 9.15 மணியளவில் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது.

    பல்லாவரம் - திரிசூலம் இடையே சென்ற போது இணைப்பு தண்டவாள பகுதி மாறததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து கடற்கரை நோக்கி சென்ற அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதேபோல் தாம்பரம் நோக்கி சென்ற ரெயில்களும் நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 9.45 மணியளவில் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு சிக்னல் சீரானது. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×