என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
அறந்தாங்கி அருகே சிறையில் இருந்து கைதி தப்பி யோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 49). இவர் மீது அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக குமாரை போலீசார் கைது செய்து, அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர். நேற்று காலை சாப்பிடுவதற்காக லாக்கப்பில் இருந்து வெளியே வந்த குமார், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு திடீரென அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அவரது சொந்த ஊர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அறந்தாங்கி கிளை சிறை சார்பில் அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் எங்கு தப்பி சென்றார் என்று விசாரணை நடத்தி, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைதி தப்பி சென்றதால் சிறை காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 49). இவர் மீது அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக குமாரை போலீசார் கைது செய்து, அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர். நேற்று காலை சாப்பிடுவதற்காக லாக்கப்பில் இருந்து வெளியே வந்த குமார், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு திடீரென அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அவரது சொந்த ஊர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அறந்தாங்கி கிளை சிறை சார்பில் அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் எங்கு தப்பி சென்றார் என்று விசாரணை நடத்தி, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைதி தப்பி சென்றதால் சிறை காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Next Story






