என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயலில் சேதம் அடைந்த பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    வார்தா புயலில் சேதம் அடைந்த பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    வார்தா புயலில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வாலாஜாபாத் சாலையில் உள்ள கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கீழ்ஒட்டிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் வீசிய வர்தா புயல் காரணமாக பள்ளி கட்டிடத்தின் மீது அருகில் உள்ள மரம் முறிந்து விழுந்தது. இதில் பள்ளியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்த கட்டிடத்தில் விழுந்த மரம் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சேதமடைந்த பள்ளியின் மேற்கூரை இது வரை சீரமைக்கப்படவில்லை.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை மீது விழுந்த மரத்தின் ஒருபகுயை மட்டுமே அகற்றினோம். ஒருபெரிய கிளை இன்னும் கூரை மீதே உள்ளது. மேலும் ஓடுகள் மற்றும் செங்கற்கள் பள்ளி வளாகத்திலேயே சிதறி கிடக்கின்றன. சேதமடைந்த வகுப்பு கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை உள்ளது. சில சமயங்களில் மாணவ மாணவிகள் அபாயகரமான அந்த கட்டிடத்தின் அருகில் சென்று விளையாடுவதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது.

    தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளித்து இன்று பள்ளி திறந்துள்ள நிலையில் விடுமுறை சமயத்தில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் சீரமைப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×