என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.43 ஆயிரம் அபேஸ்
    X

    விவசாயியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.43 ஆயிரம் அபேஸ்

    வங்கி அதிகாரி போல் நடித்து விவசாயின் வங்கி கணக்கில் இருந்த ரூ.43 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    அறச்சலூர் அருகே அட்டவணை அனுமன்பள்ளி ஓம்சக்திநகரை சேர்ந்த மாரிமுத்து(வயது35). விவசாயியான இவர் ஈரோடு எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்து எஸ்.பி.சிவகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்ததார்.

    நான் அறச்சலூரில் உள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 27-ந் தேதி எனது செல்போனுக்கு ஓரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் கனரா வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம்.அட்டை பின் நம்பரை மாற்ற வேண்டும், சேமிப்பு கணக்கு எண், ஏ.டி.எம்.நம்பரை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    நானும் அதை உண்மை என நம்பி அந்த நபரிடம் அவர் கேட்ட விவரங்களை கூறினேன்.இந்நிலையில் எண் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் எடுத்ததாக என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    எனவே என்னை நூதன முறையில் ஏமாற்றிய நபரை கண்டறிந்து என் பணத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.


    Next Story
    ×