என் மலர்
செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு அத்துமீறி தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு அத்துமீறி தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3451 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1032 பேர் உயிர் இழந்துள்ளனர். 3545 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலை விதிகளை பின்பற்றாததே ஆகும். எதிர்வரும் புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டாக இருக்க காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த 295 பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் கூடும் 120 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு காவல்துறையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
இவை தவிர புத்தாண்டின் பெயரால் யாரும் வரம்பு மீறாமல் இருக்க 50 ரோந்து வாகனங்கள் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபடுவர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ யாருக்கேனும் இடையூறு செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு அத்துமீறி தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3451 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1032 பேர் உயிர் இழந்துள்ளனர். 3545 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலை விதிகளை பின்பற்றாததே ஆகும். எதிர்வரும் புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டாக இருக்க காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் காவல்துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த 295 பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் கூடும் 120 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு காவல்துறையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
இவை தவிர புத்தாண்டின் பெயரால் யாரும் வரம்பு மீறாமல் இருக்க 50 ரோந்து வாகனங்கள் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபடுவர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ யாருக்கேனும் இடையூறு செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






