என் மலர்

    செய்திகள்

    ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி தற்கொலை
    X

    ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    திருப்பூர் ராம்நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது38). பனியன் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கணேஷ்குமார் வேதனையுடன் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் ஈரோட்டிற்கு வந்தார். மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை.

    இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு கணேஷ்குமார் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×