என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்30 Dec 2016 10:05 AM GMT (Updated: 30 Dec 2016 10:05 AM GMT)
ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
திருப்பூர் ராம்நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது38). பனியன் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணேஷ்குமார் வேதனையுடன் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் ஈரோட்டிற்கு வந்தார். மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை.
இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு கணேஷ்குமார் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர் ராம்நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது38). பனியன் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணேஷ்குமார் வேதனையுடன் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் ஈரோட்டிற்கு வந்தார். மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை.
இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு கணேஷ்குமார் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X