என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே விபத்தில் சிக்கி ஒருவர் பலி: யார் அவர்? போலீசார் விசாரணை
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சித்தோடு ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அருகே அவர் வந்த மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கி ரோட்டில் படுகாயத்துடன் கிடந்தது தெரிய வந்தது.
அவரை அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story