என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் 1324 ஓய்வூதியதாரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ஊட்டி:
முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டியில் நடந்தது. மருத்துவ முகாமை நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உதகை, குன்னூர், கூடலூர், வட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் சங்கர் பேசினார்.
முகாமில் 1324 முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதில் 45 நபர்களுக்கு கண்புரை நோய் இருப்பதை உறுதி செய்து அதில் 5 நபர்களுக்கு கண்புறை அறுவைச் சிகிச்சை செய்து அவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். மீதமுள்ள 40 நபர்களுக்கு கண்புரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அதற்கான மேல்சிகிச் சைக்காக பரிந்துரை செய்தனர்.
முகாமில் ஊட்டி ஆர்.டி.ஓ.கார்த்திகேயன், அரசுத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்