என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பனைக்குளத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
ஆட்டோ ஓட்டிவந்த சாகுல், அதில் போதிய வருமானம் இல்லாததால் அந்த தொழிலை கைவிட்டு விட்டு சமீபகாலமாக ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 5 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சாகுல் வேலைக்கு செல்ல வில்லை. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாகுல், நேற்று மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சாகுல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேவிப்பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்