என் மலர்
செய்திகள்

மும்பை செல்ல இருந்த விமான பயணியிடம் ரூ. 6 லட்சம் புதிய ரூபாய் நோட்டு சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மும்பை செல்ல இருந்த விமான பயணியிடம் சோதனை செய்த அதிகாரிகள் ரூ. 6 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரது கைப்பையை சோதனை செய்தபோது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் ரூ. 6 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதிய ரூபாய் நோட்டுகள் குறித்து மாணிக்கராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






