search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
    X

    குத்தாலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

    குத்தாலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலியானார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பொரும்பூர் கீழ தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவராம் (54) இவர் கருவடி வாய்க்கால் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.

    அப்போது அங்கிருந்த மின் கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது.

    இது குறித்து ஜெகஜீவராம் மகன் ஜெகன்ராஜ் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×