என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கல்லல் அருகே இளம்பெண் கடத்தல்: 4 பேர் கைது கல்லல் அருகே இளம்பெண் கடத்தல்: 4 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2016/Dec/201612271359204902_4-arrested-Young-woman-kidnapping-near-kallal_SECVPF.gif)
X
கல்லல் அருகே இளம்பெண் கடத்தல்: 4 பேர் கைது
By
மாலை மலர்27 Dec 2016 8:29 AM GMT (Updated: 27 Dec 2016 8:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கல்லல் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சவரகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் வான்மதி (வயது22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோம சுந்தரம் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.
இரு வீட்டார்களும் திருமணம் குறித்து பேசும் போது, ரூ.6 லட்சம் மற்றும் வரதட்சணையும், சீர்வரிசையும் செய்ய வேண்டும் என சோம சுந்தரம் வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டார் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோம சுந்தரத்திற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சய தார்த்தம் நடைபெற இருப்பதாக வான்மதிக்கு தகவல் கிடைத்தது
இதுபற்றி சோமசுந்தரத்திடம் வான்மதி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று வான்மதியை சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 5 பேரும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து வான்மதியின் தாய் பஞ்சவர்ணம் கல்லல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 4 பேரையும் கைது செய்தார். தலைமறைவான சோமந்தரம் கடத்தப்பட்ட வான்மதியை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சவரகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் வான்மதி (வயது22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோம சுந்தரம் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.
இரு வீட்டார்களும் திருமணம் குறித்து பேசும் போது, ரூ.6 லட்சம் மற்றும் வரதட்சணையும், சீர்வரிசையும் செய்ய வேண்டும் என சோம சுந்தரம் வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டார் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோம சுந்தரத்திற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சய தார்த்தம் நடைபெற இருப்பதாக வான்மதிக்கு தகவல் கிடைத்தது
இதுபற்றி சோமசுந்தரத்திடம் வான்மதி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று வான்மதியை சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 5 பேரும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து வான்மதியின் தாய் பஞ்சவர்ணம் கல்லல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து அழகம்மாள், பரமானந்தம், நித்தியானந்தம், சோனியா ஆகிய 4 பேரையும் கைது செய்தார். தலைமறைவான சோமந்தரம் கடத்தப்பட்ட வான்மதியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)