search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனாமி நினைவு தினம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    சுனாமி நினைவு தினம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    சுனாமி நினைவு தினத்தையொட்டி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மின் பிடிக்க செல்லவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    அறந்தாங்கி:

    சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோல்  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலும்  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலில்  பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பேரணியும் நடைபெற்றது. இதில் திரளான  மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி இன்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    Next Story
    ×