என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காங்கயம் அருகே கார்-வேன் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர் பலி
காங்கயம்:
கோவை செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 56). இவர் தனது மனைவி நர்மதா (54) பேரன் அகில் (8), பேத்தி நிலா (4) மற்றும் நண்பர்களான பொள்ளாச்சி அருகே உள்ள வட்டமலை பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் (46) மற்றும் கண்ணப்பன் (55) ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது கார் காங்கயம் அருகே அகத்தீஸ்லிங்கம் பாளையம் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த வேன், கார் மீது மோதியது.
இதில் தாமோதரன் உள்பட 6 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.
இந்த விபத்து பற்றி காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்