search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் பலி
    X

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் பலி

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகில் கங்கர்கோட்டையில் பட் டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

    சாத்தூர் முத்தாண்டிபுரத்தைச் சேர்ந்த தெய்வபாண்டி என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    ஒரு அறையில் வெடி மருந்து கலவையை தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அறையில் இருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    அந்த அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். மேலும் வீரர்கள் உயிரை பணயம் வைத்து, அறையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு அறையில் எத்தனை பேர் வேலை பார்த்தார்கள்? இறந்தவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×