என் மலர்
செய்திகள்

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் காந்திஜிவீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமாரின் பெற்றோர் சுமார் ரூ.1 லட்சத்தை அவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்த பணத்தை செந்தில்குமார் செலவு செய்துவிட்டார். இதனால் செந்தில்குமாரை அவருடைய பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்தபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று இரவு 8 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






