என் மலர்
செய்திகள்

இடைக்காட்டூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி இன்று இரவு நடக்கிறது
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.
இங்கு மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதப்படுவதால் தமிழகம் முழு வதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இங்கு வந்து திரு இருதய ஆண்டவரை வழிபட்டு ஜெபிக்கும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. இங்கு நடைபெறும் கூட்டு திருப்பலி, நன்றி செலுத்தும் திருப்பலி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது
இன்று (24-ந்தேதி) இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடை பெறுகிறது. நாளை (25-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருப்பலி பூஜைகளும் நடைபெறுகிறது.
ஏசு பிறப்பை கொண்டாடும் வகையில் இங்கு பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி பூஜை ஏற்பாடுகளை திருஇருதய ஆண்டவர் திருத்தல அருட் பணியாளர் ரெமிஜியஸ் செய்து உள்ளார்.






