என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகர்சாமி
    X
    அழகர்சாமி

    டெல்டா மாவட்டங்களில் மேலும் 2 விவசாயிகள் பலி

    டெல்டா மாவட்டங்களில் மேலும் 2 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த ஆந்தக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது68). விவசாயி. இவருடைய மனைவி காந்திமதி. இவர்களுக்கு இளங்கோவன் என்ற மகன் உள்ளார்.

    தியாகராஜன் ஆந்தக்குடி பகுதியில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்தநிலையில் தற்போது மழை பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனால் மன வேதனையில் இருந்த தியாகராஜன் நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார்.சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் மந்தை வெளி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது70). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். உக்கடை கிராமத்தில் 2 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார்.

    இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருக தொடங்கின. இந்த நிலையில் அழகர்சாமி நேற்று வயலுக்கு சென்றுள்ளார். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் கருகியதை கண்டு மனம் உடைந்த நிலையில் வீட்டிற்கு வந்தவர் திடீர் என மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் பயிர்கருகியதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 36 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×