என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர்கள் கருகியதால் மேலும் 2 விவசாயி பலி
    X

    பயிர்கள் கருகியதால் மேலும் 2 விவசாயி பலி

    வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மேலும் 2 விவசாயிகள் மயங்கி விழுந்து இறந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலத்தை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்திலும் பன்னாள் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரது ஒரு ஏக்கர் குத்தகை நிலத்திலும் சம்பா சாகுபடி செய்து இருந்தார்.

    போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. பயிர்கள் கருகியதை பார்த்து வேதனையடைந்த நடராஜன் வயலில் மயங்கி விழுந்தார்.

    அவரை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்ட கொரடாச்சேரி அருகே உள்ள கீர கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (65). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். வயலில் கருகிய பயிர்களை பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

    டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×