என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    X

    அரியலூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    அரியலூர் அருகே எண்ணெய் நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம்நகரை சேர்ந்தவர் விக்டர். இவர் உணவு பொருட்களுக்கான  எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரது வீட்டின் அருகேயே  எண்ணெய் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு அவரது நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இன்று மதியம் வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. விக்டரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. சோதனை முடிந்த பிறகுதான் அதற்கான காரணம் தெரியவரும்.
    Next Story
    ×