என் மலர்
செய்திகள்

புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடுவது பற்றி பேசி முடிவு எடுப்போம்: நாராயணசாமி
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி புதுச்சேரியில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது பற்றி பேசி முடிவு எடுப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
ஆலந்தூர்:
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குறித்து சில குற்றசாட்டுகளை வைத்தார். அதற்கு பிரதமர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தாரே தவிர குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியும் பதில் சொல்லவில்லை.
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே இது குறித்து 2 முறை தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மதுக்கடைகளை மூடினால் குற்ற சம்பவங்கள் குறையும் என கூறி உள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக் கடைகளை மூடவேண்டும். 500 மீட்டர் தள்ளி மதுக்கடை இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக நாங்கள் பேசி முடிவு எடுப்போம். கவர்னர் கிரண்பேடி சொல்லிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
கருப்பு பணம் மீட்பதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். வருமான வரித் துறை வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் தான். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மந்திரி அருண் ஜெட்டிலியை நான் நேரடியாக சந்தித்து சொல்லி இருக்கிறேன். மத்திய அரசு 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத்தை எடுத்து விட்டு அதற்கு தேவையான பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவில்லை.
இதனால் விவசாயிகள் நெல்லுக்கு தேவையான விதை, உரம் வாங்க பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். சிறு வணிகர்கள், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை தருகிறது. அதை சில்லரையாக மாற்ற பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனால் நம் நாடு பொருளாதாரத்தில் சரிவை சந்தித்து உள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன் யோசனை இல்லை. முன்திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குறித்து சில குற்றசாட்டுகளை வைத்தார். அதற்கு பிரதமர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தாரே தவிர குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியும் பதில் சொல்லவில்லை.
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே இது குறித்து 2 முறை தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மதுக்கடைகளை மூடினால் குற்ற சம்பவங்கள் குறையும் என கூறி உள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக் கடைகளை மூடவேண்டும். 500 மீட்டர் தள்ளி மதுக்கடை இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக நாங்கள் பேசி முடிவு எடுப்போம். கவர்னர் கிரண்பேடி சொல்லிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
கருப்பு பணம் மீட்பதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். வருமான வரித் துறை வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் தான். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மந்திரி அருண் ஜெட்டிலியை நான் நேரடியாக சந்தித்து சொல்லி இருக்கிறேன். மத்திய அரசு 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத்தை எடுத்து விட்டு அதற்கு தேவையான பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவில்லை.
இதனால் விவசாயிகள் நெல்லுக்கு தேவையான விதை, உரம் வாங்க பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். சிறு வணிகர்கள், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை தருகிறது. அதை சில்லரையாக மாற்ற பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனால் நம் நாடு பொருளாதாரத்தில் சரிவை சந்தித்து உள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன் யோசனை இல்லை. முன்திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






