என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
By
மாலை மலர்21 Dec 2016 9:44 AM GMT (Updated: 21 Dec 2016 9:44 AM GMT)

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாட்டையன் மகன் சந்திரமோகன் (வயது 32). இவர் பிலாவடியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றுள்ளார்.
1 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நன்னிலம் சாலையில் தள்ளிக்கொண்டு சென்றதாக கூறினார்கள். அதன் பேரில் தேடிய போது சித்தாடி செட்டித்தெருவை சேர்ந்த ரோக்தாஸ் மகன் ஆரோக்கியராஜ் (25), பாஸ்டின் மகன் ராஜ்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து குடவாசல் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
