search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தமபாளையத்தில் வீடு புகுந்து செல்போன், பணம் கொள்ளை
    X

    உத்தமபாளையத்தில் வீடு புகுந்து செல்போன், பணம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தமபாளையத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    உத்தமபாளையம் சந்தோஷ் தியேட்டர் பின்புறம் வசித்து வருபவர் அப்பன்ராஜ். (வயது 63). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த செல்போன், டேப்லெட் மற்றும் ரூ.1000 ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    அதிகாலையில் அப்பன்ராஜ் எழுந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததையும், பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×