என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் உழவர் சந்தையில் பெண் மரணம்
    X

    கடலூர் உழவர் சந்தையில் பெண் மரணம்

    கடலூர் உழவர் சந்தையில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
    கடலூர்:

    கடலூர் ஓதியடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி(வயது 68). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் வாழைக்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சிவகாமி உழவர் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சிவகாமியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×