என் மலர்
செய்திகள்

சிங்கம்புணரி அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சி: வாலிபர் கைது
சிங்கம்புணரி அருகே வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மணல் மேல்பட்டியில் வசிப்பவர் உலகம்மை (வயது32). இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் கோவிலுக்கு சென்றபோது, 11 வயது சிறுமி மட்டும் வரவில்லை என கூறி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் எதிர்வீட்டை சேர்ந்த காசிநாதன் (37) என்பவர் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். அவர் குடிபோதையில், வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை கண்டதும் காசிநாதன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராது ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, காசிநாதனை கைது செய்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
குவைத்தில் வேலை பார்த்து வரும், காசிநாதன் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மணல் மேல்பட்டியில் வசிப்பவர் உலகம்மை (வயது32). இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் கோவிலுக்கு சென்றபோது, 11 வயது சிறுமி மட்டும் வரவில்லை என கூறி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் எதிர்வீட்டை சேர்ந்த காசிநாதன் (37) என்பவர் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். அவர் குடிபோதையில், வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை கண்டதும் காசிநாதன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராது ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, காசிநாதனை கைது செய்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
குவைத்தில் வேலை பார்த்து வரும், காசிநாதன் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






