என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் அரசு டவுன் பஸ் மரத்தில் மோதியது: 26 பேர் படுகாயம்
    X

    மயிலாடுதுறையில் அரசு டவுன் பஸ் மரத்தில் மோதியது: 26 பேர் படுகாயம்

    மயிலாடுதுறையில் அரசு டவுன் பஸ் மரத்தில் மோதியதில் 26 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செங்கோடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை 9 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. இதனை டிரைவர் பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.

    இந்த பஸ் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி வந்தது. அதற்கு வழி விட டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், கல்லூரி, பள்ளி மாணவி ரமா, துர்கா தேவி, பிரியங்கா, ஆர்த்தி மற்றும் சதிஷ், விஜய், சின்னபாப்பா (70), மீனாட்சி உள்பட 26 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தாசில்தார் காந்திமதி, அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் நாதன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

    விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×