search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
    X

    ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

    ஆலங்குளம் அருகே ஒழுங்காக பாடம் படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆபிரகாம், விவசாயி. இவரது மகள் கவுசல்யா (வயது17). இவர் நல்லூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ஒழுங்காக பாடம் படிக்காததால் கவுசல்யாவை அவரது பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த கவுசல்யா விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×