search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான 4 மாதத்தில் இறந்த இளம்பெண்: சாவில் மர்மம் தாய் கலெக்டரிடம் புகார்
    X

    திருமணமான 4 மாதத்தில் இறந்த இளம்பெண்: சாவில் மர்மம் தாய் கலெக்டரிடம் புகார்

    திருமணமான 4 மாதத்தில் இறந்த இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் கலெக்டரிடம் புகார் கூறி உள்ளார்.

    மதுரை:

    மதுரை ராஜாக்கூரில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவர் இன்று மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

    எனக்கு 5 மகள்கள். 2-வது மகள் சாரதாவுக்கும், வண்டியூரைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் கடந்த 29-6-2014 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் 15-10-2014 அன்று உங்கள் மகள் சாரதா இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    வண்டியூர் சென்று பார்த்தபோது எனது மகள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    Next Story
    ×