என் மலர்
செய்திகள்

மெரினா நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவச்சிலை.
மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா உருவச்சிலை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் இன்று அவரது உருவச்சிலை வைக்கப்பட்டது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதா சமாதியை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்தில் கடந்த 6-ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது.
அதையடுத்து தினமும் ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதனால் ஜெயலலிதா சமாதியில் எப்போதும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. ஜெயலலிதா மீது தீவிர விசுவாசம் கொண்ட தொண்டர்கள் சமாதியில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். சமாதிக்கு வரும் பெண்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், ஆகியோர் இன்று ஜெயலிலதா சமாதியில் மொட்டை போட்டனர். பின்னர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் இன்றும் ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதா சமாதியை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதா சமாதியில் இன்று அவரது உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார் வைத்துள்ளார்.

இந்த சிலை ஆந்திராவில் செய்யப்பட்டது. பைபர் மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த உருவச்சிலை மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. சமாதிக்கு வரும் பொது மக்கள் ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் பார்த்து செல்கிறார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்தில் கடந்த 6-ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது.
அதையடுத்து தினமும் ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதனால் ஜெயலலிதா சமாதியில் எப்போதும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. ஜெயலலிதா மீது தீவிர விசுவாசம் கொண்ட தொண்டர்கள் சமாதியில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். சமாதிக்கு வரும் பெண்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், ஆகியோர் இன்று ஜெயலிலதா சமாதியில் மொட்டை போட்டனர். பின்னர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் இன்றும் ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதா சமாதியை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதா சமாதியில் இன்று அவரது உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார் வைத்துள்ளார்.

இந்த சிலை ஆந்திராவில் செய்யப்பட்டது. பைபர் மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த உருவச்சிலை மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது. சமாதிக்கு வரும் பொது மக்கள் ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் பார்த்து செல்கிறார்கள்.
Next Story