என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் மாவட்டங்களில் 21, 22-ந் தேதிகளில் மழை பெய்யும்: வானிலை மையம்
Byமாலை மலர்19 Dec 2016 3:14 AM GMT (Updated: 19 Dec 2016 3:14 AM GMT)
தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் சராசரி அளவு மழை கூட பெய்யவில்லை. அதனால் பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயப்பணிகள் தொடங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 38 செ.மீ. மழை சோழிங்கநல்லூரில் பெய்துள்ளது. இருப்பினும் மழை போதாது. குறைவாகவே பெய்துள்ளது. இந்தநிலையில் அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் நிலை குறித்தும் அது எந்த திசை நோக்கி செல்கிறது என்றும் வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நேற்று மழை எதுவும் பெய்யவில்லை. 21 மற்றும் 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் சராசரி அளவு மழை கூட பெய்யவில்லை. அதனால் பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயப்பணிகள் தொடங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 38 செ.மீ. மழை சோழிங்கநல்லூரில் பெய்துள்ளது. இருப்பினும் மழை போதாது. குறைவாகவே பெய்துள்ளது. இந்தநிலையில் அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் நிலை குறித்தும் அது எந்த திசை நோக்கி செல்கிறது என்றும் வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நேற்று மழை எதுவும் பெய்யவில்லை. 21 மற்றும் 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X