என் மலர்

    செய்திகள்

    வார்தா புயல் பாதிப்பு: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாளில் நிலைமை சீரடையும்
    X

    வார்தா புயல் பாதிப்பு: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாளில் நிலைமை சீரடையும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாளில் நிலைமை சீரடையும் என்று கண்காணிப்பு அலுவலர் முதன்மை செயலர் ராஜராமன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முதன்மை செயலர் ராஜராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வார்தா புயலினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    முக்கியமாக மின்சார சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினை சரிசெய்ய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மின்வாரியம் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தினை விரைவாக வழங்கும் வகையில் 4700 மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    இன்று முதல் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 1000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளை ஆந்திரா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 1200 பேர் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் அடுத்த இரு தினங்களில் சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடையும். மாவட்டம் முழுவதும் வார்தா புயலினால் 8300 மின் கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் இதுவரை 4500 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டத்தில் 36 கிராம பஞ்சாயத்துக்களுக்கும், 30 பேரூராட்சி வார்டு பகுதிகளுக்கும், 52 நகராட்சி வார்டு பகுதி களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 534 லாரிகள் மற்றும் 284 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×