என் மலர்
செய்திகள்

கடலூரில் போலீஸ்காரரை கொன்று உடல் எரிப்பு: கள்ளக்காதல் தகராறில் உறவினர் வெறிச்செயல்
கடலூர்:
புதுவையில் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்தவர் அருணகிரி (வயது 35). கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து இவரை காணவில்லை.
இதுதொடர்பாக அவரது மனைவி நெய்ரோஜா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 8 மாதம் கடந்து விட்ட நிலையில் இன்னும் அவரை பற்றி துப்பு துலங்கவில்லை.
இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவரது மனைவி நெய்ரோஜா மீண்டும் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கூறினார்.
இதன் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் நடவடிக்கை மேற்கொண்டார். போலீஸ்காரர் அருணகிரி மாயமானது குறித்து மீண்டும் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் மேற்பார்வையில் லாஸ்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அருணகிரியின் மனைவி நெய்ரோஜா மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் உரையாடல்களை கண்காணித்தனர்.
அப்போது நெய்ரோஜாவின் தங்கையின் கணவர் சிவானந்தம் ராபர்ட் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அருணகிரியை எரித்து கொன்று விட்டதாக திடுக்கிடும் தகவல்களை சிவானந்தம் ராபர்ட் கூறினார்.
அருணகிரியை செப்டம்பர் 10-ந் தேதி மது குடிக்க சிவானந்தம் ராபர்ட் கடலூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து சிவானந்தம் ராபர்ட்டும் மற்றும் கடலூரை சேர்ந்த கூலிப்படையினர் 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து உடலை எரித்ததுடன் அடையாளம் தெரியாமல் இருக்க சாம்பலை கடலில் கரைத்துள்ளார்.
அருணகிரி சிவானந்தம் ராபர்ட்டின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும், எனவே, அருணகிரியை சிவானந்தம் ராபர்ட் அடித்து கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது.






