என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொசுவர்த்தி சுருளால் ஆடையில் தீப்பற்றி பெண் பலி
Byமாலை மலர்17 Dec 2016 11:47 AM GMT (Updated: 17 Dec 2016 11:47 AM GMT)
கொசுவர்த்தி சுருளால் ஆடையில் தீப்பற்றி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தானம், இவரது மனைவி ராஜவள்ளி (வயது 45), சம்பவத்தன்று இரவு கொசுத்தொல்லையால் கொசுவத்தி சுருளை பற்றவைத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு கொசுவத்தி சுருள் நெருப்பு ராஜவள்ளியின் புடவை மீது பட்டு தீ பிடித்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கி கொண்டிருந்த கணவர் எழுந்து ராஜவள்ளியின் புடவையில் பற்றிய தீயை அணைத்தார். இதில் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகப்பட்டினம் போலீசில் அவரது மகள் பாக்கியமேரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X