search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
    X

    தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    தேனி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள ஹைவேவிஸ் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாயி. இவரது மகன் பிரபாகரன் (வயது 21). இவர் தன் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தொடர்ந்து கூறி வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயி திண்டுக்கல் அருகில் உள்ள நெல்லூரில் தனது மகனுக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் சென்றார். பெண் வீட்டார் இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி விட்டனர்.

    இந்த தகவலை மாயி தனது மகனிடம் கூறினார். இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×