என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Dec 2016 10:09 AM GMT (Updated: 17 Dec 2016 10:11 AM GMT)
தேனி அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த அம்சபாண்டி மனைவி அருள்மொழி மீரா (வயது 24). இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அருள்மொழி பெரியகுளத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (62). இவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த அம்சபாண்டி மனைவி அருள்மொழி மீரா (வயது 24). இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அருள்மொழி பெரியகுளத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (62). இவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X