என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கணவருடன் மொபட்டில் சென்றபோது லாரியில் சேலை சிக்கியதால் தவறி விழுந்த பெண் பலி
முதுகுளத்தூர்:
கமுதி அருகே உள்ள ராமசாமி பட்டணத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது28). இவரது மனைவி சந்தனமாரி (21). இவர்கள் இருவரும், மொபட்டில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று ராமநாதபுரம் சென்று வியாபாரம் செய்த அவர்கள் மாலையில் காவடிப்பட்டி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அரசு பள்ளி அருகே மொபட் சென்றபோது முன்னால் தண்ணீர் லாரி சென்று உள்ளது. அதனை செந்தில் முருகன் முந்திச் செல்ல முயன்றார். அப்போது சந்தனமாரியின் சேலை, லாரியில் சிக்கியதால் அவர் தவறி கீழே விழுந்தார்.
லாரியின் அடிப்பகுதியில் விழுந்த அவரது தலையில் சக்கரம் ஏறியதால், சம்பவ இடத்திலேயே சந்தனமாரி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கணவர் கண் எதிரே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக செல்வ நாயகபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்துக்குமார் (35) கைது செய்யப்பட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்