என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் தனியார் வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
சிதம்பரத்தில் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்ற தனியார் வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 48). விவசாயி. இவர் கடலூரில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடனுக்கு டிராக்டர் வாங்கி இருந்தார்.
இவர் அந்த வங்கிக்கு 3 தவணை தொகையை கட்டி விட்டார். 4-வது தவணை தொகையை கட்டவில்லை.
இந்தநிலையில் இந்த டிராக்டரை பறிமுதல் செய்ய கவரப்பட்டுக்கு தனியார் வங்கி அதிகாரிகள் இன்று சென்றனர்.
தகவல் அறிந்ததும் விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டனர். டிராக்டரை பறிமுதல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து தவணைத் தொகையை பின்னர் செலுத்தும்படி விவசாயி வைத்தியநாதனிடம் வங்கி அதிகாரிகள் கூறினர்.
அதன்பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 48). விவசாயி. இவர் கடலூரில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடனுக்கு டிராக்டர் வாங்கி இருந்தார்.
இவர் அந்த வங்கிக்கு 3 தவணை தொகையை கட்டி விட்டார். 4-வது தவணை தொகையை கட்டவில்லை.
இந்தநிலையில் இந்த டிராக்டரை பறிமுதல் செய்ய கவரப்பட்டுக்கு தனியார் வங்கி அதிகாரிகள் இன்று சென்றனர்.
தகவல் அறிந்ததும் விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டனர். டிராக்டரை பறிமுதல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து தவணைத் தொகையை பின்னர் செலுத்தும்படி விவசாயி வைத்தியநாதனிடம் வங்கி அதிகாரிகள் கூறினர்.
அதன்பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story






