என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மகனை தாக்கிய தந்தை கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருக்கு மருதமுத்து, கோவிந்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மருதமுத்துவின் மனைவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை பார்த்த ஆண்டியப்பன் மற்றும் அவரது மகன் கோவிந்தன் இருவரும் மருத முத்துவின் மனைவியை சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மருதமுத்து தனது மனைவியை ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆண்டியப்பன், கோவிந்தன் இருவரும் மருதமுத்துவை தகாத வார்த் தைகளால் திட்டி தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் வழக்கு பதிவு செய்து ஆண்டியப்பனை கைது செய்தனர். தப்பி ஓடிய கோவிந்தனை தேடி வருகின்றனர்.






