என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்16 Dec 2016 11:29 AM GMT (Updated: 16 Dec 2016 11:29 AM GMT)
மரக்காணம் அருகே தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேரில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் உள்ளது. தனியார் ஒருவர் இந்த நிலத்தை ஆக்கிரமித்து கரும்பு, நெல் பயிரிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் விவசாய சங்க தலைவர் ஏழுமலை மனு கொடுத்தார்.
இதையொட்டி வருவாய் ஆய்வாளர் மோகனப்பிரியா நேற்று ஓமிப்பேர் பகுதிக்கு வந்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு சென்றார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஓமிப்பேரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இன்று பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விவசாய சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். கிராம மக்களின் திடீர் உண்ணாவிரத போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேரில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் உள்ளது. தனியார் ஒருவர் இந்த நிலத்தை ஆக்கிரமித்து கரும்பு, நெல் பயிரிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் விவசாய சங்க தலைவர் ஏழுமலை மனு கொடுத்தார்.
இதையொட்டி வருவாய் ஆய்வாளர் மோகனப்பிரியா நேற்று ஓமிப்பேர் பகுதிக்கு வந்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு சென்றார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஓமிப்பேரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இன்று பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விவசாய சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். கிராம மக்களின் திடீர் உண்ணாவிரத போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X