என் மலர்

    செய்திகள்

    ஈரோடு அருகே பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்
    X

    ஈரோடு அருகே பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈரோடு அருகே பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து அவரின் தாய் சித்தோடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள ஆர்.என் புதூர் பாலன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகள் சந்தியா (வயது 17).

    சண்முகம் இறந்து விட்டதால் சகுந்தலா கட்டிட வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் .சந்தியா ஒலகடத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல இவர் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் சந்தியா வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அக்கம் பக்கத்திலும் சந்தியாவுடன் படிக்கும் மாணவிகளிடமும் விசாரித்தார். ஆனால் சந்தியா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை,

    எனவே இது பற்றி சகுந்தலா சித்தோடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்தியாவை தேடி வருகிறார்.
    Next Story
    ×