என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவில் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    காளையார்கோவில் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்

    காளையார்கோவில் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள அரியாக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, இவரது மகள் ஹேமா சருகனியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற ஹேமா வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து செல்லப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செய்யது அலி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி கடத்தப்பட்டாரா? என்று குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×