என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மானாமதுரையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    மானாமதுரையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர். சி.எஸ்., என்.எப்.ஐ.ஆர் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்றக் கோரி சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26 ஆயிரம், ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இதில் காரைக்குடிகிளை தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ஆதீஸ்வரன், பொருளாளர் அழகர், மானாமதுரை கிளைதலைவர் சகாதேவன், செயலாளர் தின்பிந்முர், பொருளாளர் மோகன், ஏ.டி.எஸ். அய்யப்பன் உள்பட ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×